சேகல் பள்ளிகூட சாலை என்ற பெயரில் காட்சியளிக்கும் பாதை

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சேகல் ஊராட்சி தீவமாள்பட்டினம் வழியாக ஆதிரெங்கம் – உம்பளச்சேரி சாலையில் சேகல் பள்ளி கூட தெரு சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை போட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலை சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது நடந்து கூட போக முடியாத அளவிற்கு சாலையில் கப்பி ஜல்லிகள் பெயர்ந்து உள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி போகும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பலமுறை கிராம மக்கள் புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே விரைந்து சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு அந்த பகுதிக்கு ஆய்வு சென்ற எம்எல்ஏ மாரிமுத்து இந்த சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Related Stories: