கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

தஞ்சாவூர், ஜூன் 19: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே லாரி மூலம் ஏற்றி செல்ல வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் தஞ்சை வடக்கு மாவட்ட சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் நேற்று தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் செல்வத்திடம் மனு வழங்கினார்.
அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தூர் கொத்தேரி அருந்தவபுரம் உத்தமர் குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பொருட்கள் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரியில் ஏற்றி செல்லாமல் தேக்கமடைந்துள்ளது. சில அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: