பட்டுக்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

 

பட்டுக்கோட்டை, ஜூன் 19: பட்டுக்கோட்டை மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; பட்டுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் இந்த மாதத்திற்கான பருவகால பராமரிப்பு பணிகள் நாளை 20 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதால் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பெரியதெரு, வ.உ.சி நகர், ஆர்.வி.நகர், வளவன்புரம், கண்டியன்தெரு, மன்னை நகர், தாலுக்கா ஆபீஸ், வீட்டு வசதி வாரியம், மயில்பாளையம், தங்கவேல்நகர், பெரியகடைத் தெரு, தேரடித்தெரு, பாக்கியம் நகர், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோயில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரிரோடு, ஆர்.வி.நகர், தலையாரிதெரு ஆகிய பகுதிகளுக்கும் பள்ளிகொண்டான் துணைமின் நிலையத்திற்குட்பட்ட அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாகோட்டை, மாளியக்காடு, பள்ளிகொண்டான் ஆகிய பகுதிகளுக்கும், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பழஞ்சூர், காசாங்காடு, கள்ளிக்காடு, ராசியங்காடு, துவரங்குறிச்சி, மன்னங்காடு, மழவேனிற்காடு, வெண்டாகோட்டை ஆகிய பகுதிகளுக்கும் மின்சாரம் இருக்காது.

Related Stories: