×

வாக்குமூலத்தில் முரண்பாடு பினராயி விஜயன் மகளிடம் மீண்டும் விசாரிக்க ஈடி முடிவு

திருவனந்தபுரம்: கொச்சியிலுள்ள சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் நிறுவனத்திடம் இருந்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் ரூ. 2.78 கோடி பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும், தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அவர் கொச்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போது வீணா விஜயன் அளித்த வாக்குமூலத்திலும், அவர் தாக்கல் செய்த ஆவணங்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : ED ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,The Enforcement Directorate ,Serious Fraud Investigation Office ,Kerala ,Veena Vijayan ,Kochi, ,CMRL ,
× RELATED இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த 15% சந்தா வருவாயை ஒதுக்கும் ZEE5!