×

சிபிஎஸ்இ மும்மொழி திட்டம்; இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-27ம் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகளை கட்டாயமாக்கும் திட்டம் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதுதொடர்பான் மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி, இம்மனுவை மற்ற மனுக்களுடன் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டார். நிலுவையில் உள்ள மற்ற மனுக்களுடன் சேர்ந்து இந்த மனு வரும் ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : CBSE ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,Suryakanth ,Justice ,V. Mohana ,
× RELATED உலக பல்கலைக்கழக தரவரிசையில்...