×

சிவில் சர்வீசஸ் தேர்வில் EWS பிரிவில் மோசடி!

சிவில் சர்வீசஸ் தேர்வில் EWS(பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு) பிரிவில் மோசடி நடைபெற்றுஉள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. 2025ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் EWS பிரிவில் 104 உயர்ஜாதி ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற உயர்ஜாதி ஏழைப்பிரிவு மாணவர்களின் பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற 104 உயர்ஜாதி ஏழைகளில் 67 பேர் சிறந்த பயிற்சி மையங்களில் படித்துள்ளனர். 67 பேரும் ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற மையங்களில் படித்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ளவர்களே EWS பிரிவில் சலுகைகள் பெறத் தகுதியாவர்கள்.

ஆனால், பிரபலமான சிவில் சர்வீஸ் தேர்வு மையங்களில் படித்தவர்கள், பன்னாட்டு நிறுவனங்களிள் வேலை செய்வோர், தனியார் பள்ளி நடத்துவோர், வணிகத்தில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவோர் என்று பலரின் வாரிசுகள் இந்த EWS இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி சிவில் சர்வீஸ் தேர்வில் இடம் பிடித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற 104 பேரில் 28 மாணவர்களின் பெற்றோர் தொழிலதிபர்கள், நிறுவனங்களின் உரிமையாளர்களாக உள்ளனர். குடும்ப தொழில் உள்ளவர்கள், கடை நடத்துபவர்களின் வாரிசுகளும் உயர்ஜாதி ஏழைப்பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொழிலதிபர், நிறுவன உரிமையாளர்களின் வாரிசுகள் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

10 பேர் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட தனியார் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் பணிபுரிந்துள்ளனர். மேலும் 14 மாணவர்கள் ஐஐடி, என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் என தெரியவந்துள்ளது. 46 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. லட்சக்கணக்கில் பள்ளிக் கட்டணம் செலுத்தியவர்கள் எப்படி உயர்ஜாதி ஏழை வரம்புக்குள் வருவார்கள் என கேள்வி எழுந்து வருகிறது.

ஏழ்மையை ஒழிக்க அளிக்கப்பட்ட EWS பிரிவில் மோசடி நடைபெற்றுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் EWS மோசடி குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். விசாரணை கமிஷன் அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : EWS ,
× RELATED புஷ்பா-2 பட சிறப்பு காட்சியின் ஏற்பட்ட...