நாலுமாவடியில் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

 

உடன்குடி, ஜூன் 18: நாலுமாவடியில் காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாலுமாவடியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் முக்கிய ஆன்மீக வழிபாட்டுஸ்தலங்கள், பள்ளிகள் உள்ளன. இங்கு மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டி பல மாதங்களாக பராமரிப்பின்றி நல்லிகள் உடைக்கப்பட்டு நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.  இதுகுறித்து இப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தினரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே செயல்படாத குடிநீர் தொட்டியை சீரமைத்து அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் வகையில் பிளாண்ட் அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: