திருவேங்கடம், ஜூன் 18: திருவேங்கடம், குருவிகுளம் பகுதியில் கனிமவளங்கள் கடத்திய 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் கனிமவளங்கள் கடத்தலை தடுக்குமாறு கலெக்டர் ரஞ்ஜித் சிங் உத்தரவிட்டார். அதன்பேரில் தென்காசி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் வினோத், உதவி கனிமவளத்துறை அலுவலர் மதன்குமார், ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திருவேங்கடம், குருவிகுளம் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் எந்தவிதமான அனுமதி சீட்டுகளும் இல்லாமல் கனிமவளங்களை கடத்திவந்த 3 லாரிகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பின்னர் இதில் இரு லாரிகளை குருவிகுளம் காவல் நிலையத்திலும், மற்றொரு லாரியை திருவேங்கடம் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த குருவிகுளம் போலீசார், அத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான முத்துப்பாண்டியை கைது ெசய்தனர். அத்துடன் தப்பியோடிய லாரி டிரைவர்கள் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
