கஞ்சாவுடன் 8 வாலிபர்கள் கைது

 

மதுரை ஜூன் 18: மதுரையில் கஞ்சா விற்ற 8 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரையை அடுத்த ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா வுிற்பனை செய்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் தினேஷ் என்ற நரி (24), சீதாலட்சுமி நகர் அப்பாஸ் மந்திரி மகன் தமீம் அன்சாரி (26), முனீஸ்வரன் மகன் அருண்குமார்(19), சுதந்திர நகர் ராஜா முகமது மகன் சித்திக் ராஜா(24), தங்கராஜ் மகன் பெரியசாமி(25), மலைச்சாமிபுரம் சைவத்துறை கார்த்திக் மகன் அய்யனார்(22), மதுரை, ஜெய்ஹிந்த்புரம் சங்கர் மகன் கார்த்திக்(37), ராஜகம்பீரம் முனியசாமி மகன் கார்த்திக்(20) என தெரியவந்தது. போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து 7.600 கிலோ கஞ்சா பறிமுதலானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், வாலிபர்கள் 8 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: