தஞ்சாவூர், ஜூன் 18: தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் தவெக அரசு கடன் தள்ளுபடி அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச் சயலாளர் மாசிலாமணி கூறுகையில்,
தவெக அரசு தற்போது இரண்டாவது தடவையாக விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்வதற்காக தேர்தல் வாக்குறுதியாக சிறு, குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இதர விவசாயிகளுக்கு 50 சதம் தள்ளுபடி என்று அறிவித்தது. 24.5.2026 அன்று மாநில அரசு அறிவித்திருந்த கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இணைந்து கடந்த 26.5.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
