உசிலம்பட்டி வட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி

 

உசிலம்பட்டி, ஜூன் 16: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் இன்று முதல் வருவாய் தீர்ப்பாயம் என அழைக்கப்படும் ஜமா பந்தி நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நலத்திட்ட உதவிகள் சம்பந்தமான கோரிக்கைகள் மனுக்கள் மற்றும் நில உடமைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் நேரில் கொடுத்து அதற்கு உடனடியாக தீர்வு காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருவாய் தீர்ப்பாயத்தின் முதல் நாளான இன்று கருமாத்தூர் உள்வட்டம், ஜூன் 17ம் தேதி வாலாந்தூர் உள்வட்டம்,

ஜூன் 18ம் தேதி சிந்துபட்டி உள்வட்டம், ஜூன் 19ம் தேதி உத்தப்பநாயக்கனூர் உள்வட்டம், ஜூன் 23ம் தேதி உசிலம்பட்டி உள்வட்டம் என 5 உள்வட்டங்களில் மொத்தமாக 54 கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெறுகிறது. இங்கு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஜமாபந்திக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 

Related Stories: