சென்னை: கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு, மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 48 நாட்கள் நடக்கும் இம்முகாமில் சுமார் 40 யானைகள் கலந்து கொள்ளும். முகாமில் உள்ள யானைகளை குறிவைத்து காட்டு யானைகள் வந்து தாக்கும் அச்சம் இருப்பதால், மின் வேலி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
