தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டன. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமலேயே தொழில் செய்து வருகிறோம் எனவும் 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வரும் நிலையில் கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பறிபோகும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
