ஈரோடு: பவானி அருகே காடையம்பட்டியில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பீகார் தொழிலாளி உயிரிழந்தார். பீகாரில் இருந்தபோது தெருநாய் கடித்த நிலையில் தடுப்பூசி போடாமல் அப்ரஜித் இருந்ததாக கூறப்படுகிறது. காடையம்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பீகார் தொழிலாளி அப்ரஜித் க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிசோதனை செய்தபோது அப்ரஜித்-க்கு ரேபிஸ் தொற்று இருந்தது தெரிய வந்தது. ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பீகார் தொழிலாளி அப்ரஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
