கிருஷ்ணராயபுரம், ஜுன். 13: கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட கான்ஸ், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளதா? என்று போலீசார் சோதனை நடத்தினர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பெயரில் மாயனூர் சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையில் மணவாசி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா, கான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளதா? என அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் கடைகளில் தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் எச்சரித்தனர்.
