கரூர், ஜூன் 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் நேற்று காலை ஐந்து நிமிடம் பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்தது.கடந்த சில நாட்களாக கரூர் மாவட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. சூறாவளி போல காற்று வீசினாலும் வெயிலின் தாக்கமும் மிகவும் அதிகமாகவே உள்ளது.
இந்த வெயில் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் கரூ்ா மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் ஐந்து நிமிடம் மழை பெய்தது. இந்தமழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் அனைத்து தரப்பினர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
