ஈரான் – அமெரிக்கா சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் ஏற்றம்

மும்பை: ஈரான் – அமெரிக்கா சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து உலகம் முழுவது பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளிலும் அது எதிரொத்திருக்கிறது. ஈரான் – அமெரிக்க போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்துள்ளன. இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 2%க்கு மேல் உயர்வை கண்டிருக்கிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,695 புள்ளிகள் அதிகரித்து 75,528 புள்ளிகளாக உயர்ந்திருக்கிறது. முக்கிய பங்குகளின் விளையும் ஏற்றத்தை கண்டுள்ளது. பஜாஜ் பைனான்ஸ் பங்கு 5 %, எல் அண்ட் டி பங்கு 4.9%, இண்டிகோ பங்கு 4.6%, டைட்டன் பங்கு 4 % விலை உயரந்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி வங்கி 3.6%, எட்டர்னல் 3.6%, ஆக்சிஸ் 2.9%, கோட்டக் வங்கிப் பங்கு 2.6% உயரந்துள்ளன.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 461 புள்ளிகள் அதிகரித்து 23,623 புள்ளிகளில் அதிகரித்து வர்த்தகமானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகமானது.

Related Stories: