ரூ.2.5 கோடி அபேஸ், கள்ளத் தொடர்பு விவகாரம்; அரசு பெண் டாக்டர் தற்கொலை: மருத்துவரான கணவருக்கு போலீஸ் வலை

 

 

ஜலந்தர்: ஜலந்தரில் அரசு பெண் டாக்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அரசு டாக்டராக பணியாற்றி வந்த மீனாட்சி என்பவர், தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தை பிரமோத் குமார் அளித்த புகாரின் பேரில், மீனாட்சியின் கணவரும் பிரபல கண் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருபவருமான பியூஷ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து மீனாட்சி தனியாக வாழ்ந்து வந்தார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெறத் திட்டமிட்டிருந்தார். புதிய வீடு வாங்குவதற்காக வங்கிக்குச் சென்றபோது, அவரது பெயரில் அவருக்குத் தெரியாமல் சுமார் 2.5 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது கையெழுத்தை போலியாகப் பயன்படுத்தி அவரது கணவர் இந்தக் கடனை வாங்கியதை அறிந்து மீனாட்சி கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், தனது கணவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே வேலை செய்யும் ஒரு நர்ஸுடன் அவருக்குத் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் மீனாட்சி உறுதி செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பியூஷ் ஏற்கனவே மீனாட்சியைத் தாக்கி துன்புறுத்தியதுடன், கடந்த ஆண்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் முயன்றதாகப் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த உயிரிழப்பு தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாகும்.

2.5 கோடி ரூபாய் கடன் மற்றும் கள்ளத்தொடர்பு விவகாரமே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்’ என்றனர். தலைமறைவாக உள்ள டாக்டர் பியூஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தனது கணவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே வேலை செய்யும் ஒரு நர்ஸுடன் அவருக்குத் கள்ளத்தொடர்பு இருந்த தாகவும், இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் மீனாட்சி உறுதி செய்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்

Related Stories: