பெரம்பூர்: அயனாவரத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய 63 வயது மூதாட்டிக்கு வடமாநில வாலிபர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 63 வயது மூதாட்டி. இவர், தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்றும் அதிகமாக இருந்ததால் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு கணவருடன் மூதாட்டி தூங்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மூதாட்டியின் ஆடைகளை யாரோ களைவது போல இருந்துள்ளது.
இதனால் திடுக்கிட்டு எழுந்த மூதாட்டி அதிர்ச்சியுடன் சத்தம் போட்டார். இதனால் அந்த நபர் தப்பித்து ஓடி விட்டார். உடனடியாக மூதாட்டி, கணவரை எழுப்பி நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டி வீட்டின், பக்கத்து வீட்டில் வசித்து வந்த வட மாநில நபர்கள் 3 பேர் வசித்து வருவது தெரிய வந்தது. உடனே அந்த வீட்டின் கதவை போலீசார் தட்டினர். ஒருவர் எழுந்து வந்து கதவை திறந்தார். மற்ற 2 நபர்கள் தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து மூதாட்டியை அழைத்து போலீசார் அடையாளம் காட்டும்படி கூறினர்.
உடனே அவரும், ‘இவர்தான் என் வீட்டுக்கு வந்தவர்’ என கூறினார். ஆனால் அவரோ, ‘எனக்கு எதுவும் தெரியாது, வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன்’ என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார், தங்களது பாணியில் விசாரணை நடத்தியதில், பிடிபட்ட நபர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த யோகேஷ் (33) என்பதும், நண்பர்களுடன் அயனாவரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், இன்று அதிகாலை 2 மணியளவில் மூதாட்டி வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் யோகேஷ் ஈடுபட்டுள்ளார்.
அவர் கூச்சலிடவே, அறைக்கு வந்து பேண்ட், சர்ட் அணிந்து எதுவுமே தெரியாததுபோல படுத்து கொண்டார். போலீசார் கதவை தட்டியதம் 2 பேர் தூங்கி கொண்டிருக்க யோகேஷ் மட்டும் பேண்ட் சர்ட் அணிந்து தூங்கி கொண்டிருந்தேன் என பொய் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து யோகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
