1.5 கிலோ தங்கம் கொள்ளை 3 முக்கிய குற்றவாளிகள் கைது: 1 கிலோ தங்க கட்டிகள், ரூ.47 லட்சம் பறிமுதல்

நெல்லை: கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து கடந்த மாதம் 16ம் தேதி இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் தங்க நகை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி செய்துவரும் திருச்சூரை சேர்ந்த ஜோஸ் (47) என்பவர் 1473.97 கிராம் தங்க நகையை நெல்லை, வள்ளியூர் நகைகடைகளில் கொடுப்பதற்காக சோல்டர் பேக்கில் வைத்து கொண்டு நெல்லை சந்திப்புக்கு வந்துள்ளார்.

அவர் தூங்கியபோது மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசில் வழக்கு பதிவு செய்து, திருச்சூரில் பதுங்கிருந்த கொள்ளையர்கள் அபுதாகீர், டோலி, சித்திக், கோபக்குமார், சர்புதீன், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருச்சூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளிகள் ரஞ்சித், சுஜித், பிபின் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இவர்கள் மூவரும் ரயிலை பின்தொடர்ந்து காரில் குழித்துறை வரை வந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்கிக் கொண்டு காரில் திருச்சூர் தப்பி தங்க கட்டிகளாக உருக்கியது விசாரணையில் தெரியவந்தது. கைதான 8 பேரிடம் இருந்து 1083.930 கிராம் மதிப்புள்ள 5 தங்க கட்டிகள் மற்றும் ரொக்க பணம் ரூ.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: