புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை தூக்கு தண்டனை பெற்றவரை காணொலியில் ஆஜர்படுத்த வேண்டும்: சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரியில், ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கருணாஸை ஜூன் 18ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, முத்​தி​யால்​பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்​த 2024 மார்ச் 2ம் தேதி வீட்​டின் அருகே விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென மாயமா​னார். 2 நாட்​களுக்​குப் பின் அருகே உள்ள வாய்க்​காலில் கை, கால்​கள் கட்​டப்​பட்டு போர்​வை​யால் சுற்​றப்​பட்​ட நிலையில் பிண​மாக மீட்​கப்​பட்​டார்.

புதுச்​சேரியை உலுக்​கிய இந்த சம்​பவம் தொடர்பாக போக்சோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த முத்​தி​யால்​பேட்டை போலீ​சார் அதே பகு​தி​யைச் சேர்ந்த கருணாஸ், விவே​கானந்​தன் ஆகியோரை கைது செய்​தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விவே​கானந்​தன் கடந்​த 2024ம் ஆண்டு செப்​டம்​பரில் கழி​வறை​யில் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

இதையடுத்து, கருணாஸுக்கு எதிரான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த மே 8ம் தேதி தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஜூன் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கருணாஸுக்கு உத்தரவிட்டது. அன்றைய தினம், கருணாஸை காணொலியில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: