×

தினமும் கணவர் செக்ஸ் டார்ச்சர்; புதுப்பெண் தூக்கு மாட்டி தற்கொலை: சாவில் சந்தேகம் என தாய் புகார்

 

திருவாரூர்: திருவாரூர் அருகே கணவரின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்(32). கொத்தனார். இவரது மனைவி ஓவியா. இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஓவியா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது தனது சாவுக்கு கணவர் தான் காரணம் என்று மருத்துவமனையில் சிகிச்சையின்போது அவர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் ஆனந்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஆனந்த் ஜாமீனில் வெளியில் வந்தார். இதையடுத்து ஆனந்த் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே அம்மாசத்திரம் கிராமத்துக்கு வேலைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த அனிதா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் அனிதாவின் கணவர் இறந்து விட்டார். அதன்பின்னர் மாமனார் வீட்டிலேயே குழந்தையுடன் அவர் வசித்து வந்தார். கணவர் இறந்த 2 மாதத்திலேயே அனிதாவுக்கு, ஆனந்துடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன் அனிதா குழந்தையை மாமனார் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து ஆனந்தை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் ஆனந்த் காதல் மனைவியை ஏரிக்கரைக்கு அழைத்து வந்து தனது தாயுடன் வசித்து வந்தார். ஆனந்த்துக்கு குடிபழக்கம் இருந்தது. இதனால் அவர் குடித்துவிட்டு வந்து, தினமும் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தாராம். மனைவிக்கு விருப்பம் இல்லை என்றாலும், உல்லாசத்துக்கு வலுக்கட்டாயமாக அழைப்பாராம். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் அனிதா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் அவரது தாய் மாரியம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து அனிதாவின் தாய் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மகள் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அவரது சாவில் மர்மம் உள்ளது. அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதேபோல் ஏரிக்கரை கிராம மக்கள் வந்து தனியாக ஒரு புகார் அளித்தனர். அதில் ஆனந்தின் முதல் மனைவியும் தீயில் கருகி மர்மமான முறையில் இறந்த நிலையில், தற்போது 2வது காதல் மனைவியும் தூக்கில் மர்மமாக இறந்துள்ளார். இரு சாவிலும் சந்தேகம் உள்ளது. பெண்களுக்கு அவரால் அச்சுறுத்தல் உள்ளதால் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனிதாவுக்கு 2வது திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் மன்னார்குடி ஆர்டிஓ யோகேஸ்வரனும் விசாரணை நடத்தி வருகிறார். குடித்துவிட்டு வந்து, தினமும் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தாராம். மனைவிக்கு விருப்பம் இல்லை என்றாலும், உல்லாசத்துக்கு வலுக்கட்டாயமாக அழைப்பாராம்

Tags : Thiruvarur ,Anand ,Erikkarai village ,Perugavazhantan ,Thiruvarur district ,Oviya ,
× RELATED நீலகிரியில் கோடை சீசனில் சர்க்கியூட்...