×

நீலகிரியில் கோடை சீசனில் சர்க்கியூட் பஸ்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பயணம்

 

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் காலமான கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்ட சர்க்கியூட் பஸ்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளாக சர்க்கியூட் பஸ் சேவை போக்குவரத்து கழகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சர்க்கியூட் பஸ்களில் பெரியவர்களுக்கு ரூ.100ம், குழந்தைகளுக்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இத்திட்டம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்தில் 4 பஸ்கள் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு மலர்கண்காட்சி நடந்த 10 நாட்களில் 40 பஸ்கள் வரை இயக்கப்பட்டது. தொடர்ந்து, இம்முறை பள்ளிகள் திறக்க தாமதம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

இதனால் சர்க்கியூட் பஸ்கள் இம்மாதம் துவக்கம் வரை இயக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் சர்க்கியூட் பஸ்கள் மூலம் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Nilgiris ,Ooty ,Nilgiris district ,
× RELATED பொது இடத்தில் பிறந்த நாள் கேக் வெட்டி...