தேனி: தமிழக அரசு சார்பில் இலவச நோட் புத்தகங்கள் கொடுத்தாலும் அதிகமான அளவில் நோட்டுகள், நோட்ஸ்கள், பாட புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வெளியில் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. பள்ளி திறந்து ஒருவாரமான நிலையில் கல்வி உபகரணங்களை வாங்க உத்தமபாளையம், தேவாரம் பகுதிகளில் உள்ள வெளிகடைவீதிகளில் பெற்றோர் குவிந்து வருகின்றனர்.
தற்போது சிறிய அளவிலான கடைகளில் அதிகளவில் நோட்ஸ்கள், வாங்க வேண்டியதுள்ளதால், அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு விட 10 முதல் 20% வரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வால் சாமானியர்கள் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருவதால், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
