வெளிநாட்டில் இறந்த தொழிலாளி உடலை மீட்க வலியுறுத்தல்

பரமக்குடி, ஜூன் 11: பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி துபாயில் இறந்து ஒரு மாதமாகியும் உடலை மீட்க முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர். பரமக்குடி அருகே சூடியூரை சேர்ந்தவர் விக்டர் ஆரோக்கியதாஸ் (48). இவர், 2025ல் துபாய் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மே5ல் விக்டர் ஆரோக்கிய தாஸ் இறந்து விட்டதாக அலைபேசியில் அவரது மனைவி வினோலியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்து வினோலியா கூறுகையில், கணவர் இறப்பிற்கான காரணம் சரியாக தெரியவில்லை. இரு குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வலியுறுத்தி மே 14ல் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள சிவகுரு பிரபாகரன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 

 

Related Stories: