கிருஷ்ணராயபுரம் அருகே கார்- டேங்கர் லாரி மோதல்

கிருஷ்ணராயபுரம், ஜுன் 11: கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாலாபேட்டையில் கார் மீது டேங்கர் லாரி மோதியதில் அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(26) அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கரூரிலிருந்து நேற்று மாலை துறையூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை பகுதியில் அதே திசையில் பின்னால் வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த விஜி (37) என்பவர் ஓட்டி வந்த டேங்கர் லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் சாலை அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: