பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி: எஸ்பி ஆபீசில் கட்சி பெண் பிரமுகர் பரபரப்பு புகார்

தென்காசி: தென்காசி காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. தவெக பிரமுகர். இவர் தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: தென்காசி மத்திய மாவட்ட தவெகவில் சில பிரச்னைகள் நடக்கிறது. அதனை மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் கவனத்திற்கு கொண்டு சென்றால் காது கொடுத்து கேட்பது இல்லை. பெண்களை அவதூறாக பேசுவது உள்பட நிறைய விஷயங்கள் தவறாக நடக்கிறது.

அவற்றை என்னால் முழுமையாக கூற இயலாது. தவெக செயற்குழு உறுப்பினரான ராபின் என்ற தவறான நபரை மாவட்ட செயலாளர் உடன் வைத்துக்கொண்டு பலரை நீக்கி வருகிறார். மகளிருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று தான் முதல்வர் கூறி இருக்கிறார். ஆனால் தென்காசி மத்திய மாவட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனை மாவட்ட செயலாளரிடம் கூறினால் அவர், ராபினுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

என்னை கட்சியை விட்டு தூக்குவதாக கூறுகிறார். நான் கட்சியில் கிடையாது என்கிறார். நான் ஒரு வருடமாக கட்சியில் பயணித்து வருகிறேன். அதற்குரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. கட்சியில் உள்ள எனக்கே இந்த நிலை என்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி ஆறுதல் கிடைக்கும். நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் வெளியே வந்து புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் வரவில்லை. முதல்வர் பெண்களுக்கு முழு பாதுகாப்பு என்று கூறும் நிலையில் மாவட்டச்செயலாளர் பெண்களை மதிப்பதே இல்லை.

எனக்கு நடந்த சம்பவம் எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலாளர் ராஜபிரகாஷ் தென்காசி எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். எனது வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் சிலரின் தூண்டுதலின் பேரில் செல்வி என்பவர் பொய் புகார்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதோடு, இங்கு பொய் புகார் கொடுத்துள்ளார் என கூறியுள்ளார்.

Related Stories: