பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

 

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தலைமையில் இன்று சென்னை எழிலகம், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் துறையின் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப அலை அபாயங்களை முன்னிட்டு, மாநில அளவிலான வெப்ப செயல் திட்டம் 2026 தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கிராம அளவிலும் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் வார்டு அளவிலுமான வெப்ப பாதிப்பு மற்றும் அபாய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது, வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிறுவன ஒருங்கிணைப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய முக்கியமான துறைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும், மாவட்ட மற்றும் மாநகர வெப்ப செயல் திட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் தகவல் பரப்புரை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. துறைவாரியான முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்ட நூலினை பின்வரும் இணைப்பின் மூலம் அணுகலாம். //beta-tnsmart.rimes.int/index.php/Action_plan/HeatWave.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் நா. முருகானந்தம், முதன்மைச் செயலாளர் மற்றும் நிலசீர்த்திருத்த ஆணையர் ஹர் சஹய் மீனா முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் G. பிரகாஷ் முதன்மைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், நிலசீர்த்திருத்த ஆணையர் பா. மகேஸ்வரி வருவாய்த்துறை செயலாளர் K.S. பழனிசாமி நில நிர்வாக ஆணையர் R. கஜலட்சுமி கூடுதல் ஆணையர் (திரைப்படம்) S. செந்தாமரை சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் T. கிறிஸ்துராஜ் அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: