விளம்பர அரசியலை குறைத்துக்கொண்டு பெரம்பூர் தொகுதி மின் தடை பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் அட்வைஸ்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. மின்வெட்டு பிரச்னை குறித்து முறையிட மின்சார வாரிய அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு உரிய பதிலளிக்க ஆட்கள் இல்லாத அவலநிலையும் நீடிக்கிறது. அவசர காலங்களில் பணியாற்ற வேண்டிய பணியாளர் பற்றாக்குறை நிலவுவதும், அதிகாரிகள் மக்களின் அழைப்புகளை ஏற்க மறுப்பதும் தற்போதைய தவெக அரசின் நிர்வாக குறைபாட்டை தெளிவாக காட்டுகிறது. எனவே, விளம்பர அரசியலை குறைத்துக்கொண்டு, பெரம்பூர் தொகுதி மக்களின் மின்தடை பிரச்னைக்கு தமிழக முதல்வர் விஜய் உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: