- இபிஎஸ்
- சண்முகம்
- அல்தாமுரம் ஆட்டாம்புரம்
- திண்டிவனம்
- முன்னாள் அமைச்சர்
- விழுப்புரம்
- மாவட்டம்
- இ.
- சன்முக்
- முன்னாள் அமைச்சர்கள்
- வெல்லுமணி, சி.
- ஐத்முகா
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- சன்முகம்
- சன்முகம்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் பதவிகளை இபிஎஸ் அடுத்தடுத்து பறித்து வருவதால் அதிமுகவில் சலசலப்பு நீடிக்கிறது.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு பிரிவினர் செயல்பட்டபோது, சி.வி.சண்முகம் வசித்து வந்த விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பசுபதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் அதிமுக மாவட்ட ஆபீசை கைப்பற்றுவதில் இருதரப்புக்கும் போட்டா போட்டி நிலவியது. கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பசுபதி தரப்புக்கு வெற்றி கிடைத்தது.
சி.வி.சண்முகம் தரப்பு சாவியை ஒப்படைக்க அதை பசுபதியிடம் அதிகாரிகள் வழங்கினர். இதனிடையே சி.வி.சண்முகம் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில், சண்முகம் வீட்டு அருகே நடந்த போராட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் படத்தின் மீது தார் பூசி, அவமரியாதை செய்யப்பட்டது. இதுதொடர்பாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி படத்தை அவமரியாதை செய்த, விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் கோகுல்ராஜ், இணைச் செயலர் பாலாஜி, மாவட்ட ஜெ., பேரவை துணைச்செயலர் சக்தி பெரியதம்பி, கண்டமங்கலம் ஒன்றிய ஐ.டி, பிரிவு செயலர் சேதுபதி ஆகிய 4 பேரின் கட்சி பதவிகளை அதிரடியாக நேற்று பறிக்கப்பட்டன.
இதற்கான உத்தரவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். அதேவேளையில் புதிய நிர்வாகிகளாக பசுபதியின் ஆதரவாளர்கள் நியமிக்கப்படுவதால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. எம்எல்ஏ பதவி ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கி சி.வி.சண்முகம் தொடர்ந்து அமைதி காத்துவரும் நிலையில் விரைவில் அவர் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
