×

அண்ணாமலையின் புதிய கட்சி வேலைக்கு ஆகாது: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

 

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக கூறப்படுகிறது. புதிய கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அண்ணாமலை எதற்காக கட்சி தொடங்குகிறார்? தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் இல்லை. பாஜக என்ற பெயர் மட்டுமே, புதிய கட்சியில் மாற்றமாக இருக்கும். இதனால் அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சிக்கு எந்த பலனும் இல்லை.

இந்துத்துவா, மும்மொழி கொள்கை, இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை அளித்த கட்சிகள், தமிழகத்தில் வீழ்த்தப்பட்டதாகத்தான் வரலாறு இருக்கிறது. பாஜகவை உயிர்ப்பிக்க எவ்வளவோ முயன்றும் முடியாததால், வேஷம் மாற்றி, வேறொரு கட்சியை ஆரம்பித்து, ஏதாவது சாதிக்கலாமா என பார்க்கிறார்கள். மத்தியில் ஆளும் பாஜகவின் முகமூடியை மட்டும் மாற்றி, புதிய பெயரில் கட்சி தொடங்கினாலும், தமிழகத்தில் ஆதரவை திரட்ட முடியாது. அண்ணாமலைக்கு மீண்டும் ஒரு தோல்வி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Annamalai ,K. ,Balakrishnan ,Vilupura ,Political Leadership Committee ,Marxist Communist Party ,K. Balakrishnan ,Viluppuram ,BJP ,
× RELATED பாஜகவில் இருந்து கரு நாகராஜன் விலகல்