சென்னை: தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை; தமிழ்நாடு குறித்த தனது பார்வையும் பாஜக மூத்த தலைவர்களின் பார்வையும் ஒன்றாகவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். 18 மாதங்களாக எனது அதிருப்தியை தெரிவித்து வந்தேன். அரசியலில் நான் நுழைந்ததற்கான காரணத்தை நிறைவேற்றும் சரியான தருணம் வந்துள்ளது. எனது மொழியின் பெருமை, கலாசாரத்தின் சிறப்பு ஆகியவற்றோடு எனது பிராந்தியத்தின் நலனும் முக்கியம்.
