×

அம்பத்தூர் பகுதியில் 5 மணி நேரம் மின்தடை: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

 

சென்னை: அம்பத்தூர் எஸ்.வி.நகர், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், பானுநகர் புதுநகரில் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இரவு நேரத்தில் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டதால் மக்கள் புழுக்கத்தில் உறங்க முடியாமல் தவித்துள்ளனர். முறையான பதில் இல்லாததால் கள்ளிக்குப்பம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொள்ள முயன்றால் முறையான பதில் கிடைக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின்போது மின்வாரிய அதிகாரிகளிடம் மக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்

Tags : Ambattur ,Chennai ,Nagar ,Kallikupam ,Madhanangupam ,Panunagar Pudunagar ,
× RELATED விஜய்யின் தீவிர ரசிகையான என்னை...