மதுராந்தகம்: கலைஞரின் 103வது பிறந்தநாளையொட்டி, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட செயலாளர் க.சுந்தர் அணிவித்தார். மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞர் பிறந்தநாள் விழாவையொட்டி மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் கலந்துகொண்டு நேற்று முன்தினம் பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெட்டகங்கள் வழங்கினார். அப்போது, நகர்மன்ற தலைவர் மலர்விழி குமார், நகர செயலாளர் குமார், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம், தனசேகரன், தேவராஜ், ஜான் சத்திய குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மதுராந்தகம் நகரில் உள்ள மசூதி எதிரி திமுக நிர்வாகி காதர் ஏற்பாட்டில் 800 பேருக்கு நகர செயலாளர் குமார் பிரியாணி வழங்கினார். கருங்குழி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் கேக் வெட்டி 500 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதா சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருவாத்தூர் பவுஞ்சூர் பகுதியில் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி கேக் வெட்டி, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, ராஜேந்திரன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ரங்கநாதன், துணை அமைப்பாளர் பாரதி பாபு, ஒன்றியவை தலைவர் லோகநாதன் ஒன்றிய துணைச் செயலாளர் ஏமநாதன், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் மாரிமுத்து சரண்குமார், ஜெயக்குமார், சுந்தரமூர்த்தி, யுவராஜ், ஹேமந்த் குமார், சுமதி பரசுராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
