இஸ்ரேல் – லெபனான் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹிஸ்புல்லா நிராகரிப்பு

பெய்ரூட்: இஸ்ரேலுக்கும், லெபனான் அரசிற்கும் இடையில் எட்டப்பட்ட சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா நேற்று நிராகரித்தது. இஸ்ரேல் -லெபனான் இடையே புதிய போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக ஹிஸ்புல்லாவை உள்ளடக்கவில்லை.

இந்நிலையில் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் போர் நிறுத்தத்திற்குள் நுழைவதற்கான கடைசி வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு லெபனான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் -லெபனான் இடையேயான இந்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா நிராகரித்தது.

ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசெம் தொலைக்காட்சியில் வாசித்த அறிக்கையில், ‘ தெற்கு லெபனானை விட்டு ஹிஸ்புல்லா போராளிகள் வெளியேற வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கோரிக்கையானது சரணடைதல், தோல்வி மற்றும் எதிரியின் இலக்குகளை அடைதல் என்று பொருள்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: