×

பீகார் மருத்துவமனையில் தீவிபத்து 5 நோயாளிகள் பலி

பாட்னா: பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பிரசாத் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் நேற்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு நோயாளிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீவிபத்தால் மருத்துவமனையில் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினர் 3.55 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். தீப்பிடித்துக்கொண்ட தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். கடுமையான போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் வந்தது. தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார். 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Tags : Bihar ,Patna ,Prasad Hospital ,Muzaffarpur district ,
× RELATED லாரி மீது கார் மோதி 3 பேர் நசுங்கி பலி