×

இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஏர் டிரங்க் நிறுவனம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதுடன் 5 ஜிகாவாட் அளவிலான தரவு மையம் ஒன்றை ஏர் டிரங்க் நிறுவனம் அமைக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பயணம் குறிப்பிடத்தக்க வேகத்தை பெற்று வருகிறது. ஏர் டிரங்க் நிறுவனம் இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவும், 5ஜிகாவாட் தரவு மையம் அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்புச் சூழலில் முன்மொழியப்படும் அதிகளவிலான முதலீடு இதுவாகும்.

இத்தகைய முதலீடுகள் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஏஐக்கான சர்வதேச மையமாகும் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் விநியோக சங்கிலியை பலப்படுத்தி, புதுமையான கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற ஊக்கமளிக்கும். உலகத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான எதிர்காலம், இந்தியாவில் வடிவமைக்கப்படுவது அதிகரித்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Air Trunk Company ,India ,PM Modi ,New Delhi ,Modi ,Air Trunk ,X site ,
× RELATED எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை...