×

வெறும் 200 ஆண்டுகளில் உலகளவில் தீவிரமாகிய சுற்றுச்சூழல் பாதிப்புகள்

சென்னை: உலகின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகள் கடந்த 40 ஆண்டுகளில் 5ல் ஒரு பகுதியை இழந்துள்ளன. பூமியின் குளிர்சாதன பெட்டியான ஆர்டிக் 4 மடங்கு வேகமாக வெப்பம் அடைந்து 10 ஆண்டுகளுக்கு 12% பனிப்பரப்புகளை இழந்து வருகிறது. பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பை திரட்சி தமிழகத்தை விட 12 மடங்கு பெரியது. இந்த சுற்றுசூழல் அழிவுக்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல, உலக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள் தொடர்ந்து இடம் பிடிக்கின்றன.

இங்கு ஒரு நபர் ஆண்டுக்கு 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறார். கடந்த 20 ஆண்டுகளில் வெப்ப அலை, கடும் மழை, வெள்ளம் போன்ற தீவிர இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன. இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நடக்கும் குவாரி சுரண்டல்கள் இயற்கை வளங்களை அழிக்கின்றன. கடலோர பகுதிகளில் கடல் அரிப்பும் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.

மனித இனம் தோன்றியதில் இருந்து மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை விட கடந்த 200 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் மிக அதிகம் என்கிறனர் நிபுணர்கள் . இந்த தீவிரத்தை உணர்ந்து சுற்று சூழலை காக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் உள்ளது. இதனால் தான் 1974 முதல் ஜூன் 5 தேதி உலக சுற்றுசூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையை காப்பது அரசுகளின் கடமை மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

Tags : Chennai ,Amazon ,Arctic ,Earth ,Pacific Ocean… ,
× RELATED புதிய அப்டேட் விரைவில் வருகிறது:...