×

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதால் விஜய் அரசு மீது மக்கள் கோபம் – பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம்: கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாச்சலம் எல்எல்ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த் கூறி இருக்கிறார். அதே போல தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என்றும் பிரேமலதா குற்றம்சாட்டி இருக்கிறார். விருத்தாசலம் தொகுதி முழுக்க தான் சுற்றி வந்ததாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை என்றும் கூறினார். தவெக அரசு அறிவித்தபடி 717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா என்பது குறித்து முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். தான் நேரில் ஆய்வு செய்தபோது பல கடைகள் இன்னும் மூடப்படாமல் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வர் பொறுப்பில் இருப்பதையே மறந்துவிட்டு, தேர்தல் பரப்புரையில் பேசுவதை போல பேசாமல் ஆக்கப்பூர்வமாக முதல்வர் விஜய் பேச வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதே போல் அறிவித்தபடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக கூறினார். எந்த விவசாயியும் மகிழ்ச்சியாக இல்லை. எப்போதுமே இருக்கின்ற நிதிநிலையை பார்த்து தான் வாக்குறுதி கொடுக்க வேண்டும். வாக்குறுதி கொடுத்து ஜெயித்து ஆட்சிக்கு வந்து விட்டால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி தானே ஆக வேண்டும். இல்லை என்றால் மக்கள் கேட்க தானே செய்வார்கள் என்றார். தவெக அரசு அறிவித்தபடி ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று கொடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

Tags : Vijay government ,Premalatha ,Vijayakant ,Virudthasalam ,Demutika ,Secretary General ,Virudthachalam ,LLA ,Premalatha Vijayakant ,Tasmak ,Government of Tavega ,
× RELATED புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ள...