அரக்கோணம், ஜூன் 4: 1 முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எளிய முறையில் பாடம் நடத்துவது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த,புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது?என்பது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில முழுவதும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர்,வாலாஜா (கிழக்கு),வாலாஜா (மேற்கு),ஆற்காடு, திமிரி ஆகிய 8 (கல்வி துறை) வட்டாரங்கள் உள்ளது.இங்கு,704 அரசு,அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளது. இங்கு,1முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 1,2 மற்றும் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை இப்படி? எளிய முறையில் புரியும் வகையில் கற்றுக் கொடுப்பது என்பது குறித்து மாவட்டம் முழுவதும் சுமார் 1000கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 3 நாட்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலமாக தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை சார்பில் கூறுகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 1முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. பள்ளிகள் திறந்த முதல் நாளே, இந்த புத்தகம் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு மாவட்ட முழுவதும் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி 3ம் தேதியுடன் (நேற்று) நிறைவு பெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1முதல் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர் என்றனர்.
