- தூத்துக்குடி
- திருச்செந்தூர்
- வெளியுறவு அமைச்சர்
- கமலை
- அருமுக்னேரி
- மீன்வளத்துறை அமைச்சர்
- தவேகா ஊராட்சி
- ஸ்ரீநாத்
- சாமி தரிசனம்
- திருச்செந்தூர் கோயில்
- மானிப்பாடு
- அமலினகர்
- வீரபாண்டியபட்டினம்
- திருச்செந்தூர்
ஆறுமுகநேரி: தவெக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கடந்த 30ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து மணப்பாடு, அமலி நகர், வீரபாண்டியபட்டணம் உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடத்தினார். தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த புன்னைக்காயல் பகுதிக்கு சென்ற அமைச்சர் அங்கு திறந்த காரில் நின்றபடி ‘எல்லாருக்கும் வணக்கம், வணக்கம், வணக்கம். புன்னைக்காயல் மக்களே ஐ லவ் யூ, லவ் யூ, லவ் யூ, லவ் யூ. உங்கள் அன்புக்கு, உங்கள் ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, கேள்விப் பட்டேன் அதிக வாக்குகளை, வாக்கு வித்தியாசத்தில் என்ன ஜெயிக்க வச்ச உங்க ஊருக்கு, உங்க மக்களுக்கு, ‘நம்ம மக்களுக்கு’ கோடான கோடி நன்றிகள், நன்றிகள் என பேசினார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள் குறைகளை கேட்காமல் அவர் வெற்றி பெற்ற தூத்துக்குடி தொகுதி இல்லை என தெரியாமல் வேறு தொகுதி மக்களுக்கு என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்ததற்கு நன்றி என தெரிவித்ததை அதிமுக நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘தொகுதி தெரியாமல் உளராத, காமெடி ஷோ கண்டினியூ, சினிமாவிலேயே சுத்தமாக நடிக்க வராது, அரசியலில் நல்லா நடிச்சி பழகிட்ட, எந்த தொகுதி என தெரியாமல் நன்றி தெரிவிப்பதா என பல்வேறு வகையாக அமைச்சர் ஸ்ரீநாத்தை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
