×

தமிழ்நாட்டில் காலியாகும் எம்பி சீட்டை காங்கிரசுக்கு ஒதுக்க தவெக தலைவரிடம் பேச்சு: மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி

 

 

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்துக்கு நேற்றிரவு கோவாவில் இருந்து விமானம் மூலமாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வந்திறங்கினார். பின்னர் சென்னை விமானநிலையத்தில் இருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கிரிஷ் சோடங்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. இதுகுறித்து தவெக தலைவர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன்மூலம் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி சீட்டில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனக்கு கோவா மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது பரிசு அல்ல. அதை நான் கூடுதல் பொறுப்பாகத்தான் கருதுகிறேன். தமிழக பாஜவில் அண்ணாமலை விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனவே, அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அதேபோல், இந்தியா கூட்டணியில் தவெக சேருமா என்பது குறித்தும் நான் எதுவும் கூறமுடியாது. அதுகுறித்து தவெக தலைமையும் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் தற்போதுவரை திமுக அங்கமாக இடம்பெற்றுள்ளது.

அதில் மாற்றம் ஏதேனும் இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து பேசியது மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியை சிறப்பாக நடத்தி, அந்த ஆட்சிக்கு மக்களிடம் நற்பெயர் கிடைப்பதற்கு இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர் என்று கிரிஷ் சோடங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags : Daveka ,Congress ,Tamil Nadu ,Malitha ,Officer ,Krish Sodankar ,Chief Commissioner ,Chennai Airport Domestic Terminal ,Goa ,Chennai Airport ,
× RELATED கூட்டணி பேரம்; தலைமைச் செயலகமா? தவெக...