அகரம்சீகூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை மூட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை

குன்னம், ஜுன் 3: குன்னம் அருகே அகரம்சீகூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் கோயில் மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பெரம்பலூர் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகரம்சீகூர் கிராமத்தில் 6423 என்ற நம்பர் உள்ள டாஸ்மாக் கடை கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அருகில் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், நியாய விலை கடை, பகுதி நேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சுமார் 100 மீட்டர் தூரத்தில் இயங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டிய பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை பழைய இடத்திலேயே கடை இயங்கி வருகிறது. எனவே புதிய தமிழக அரசு உடனடியாக மது கடையை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் சமூக ஆர்வலர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். மேலும் அகரம்சீகூர் பஸ் நிலையம் 200 மீட்டர் தூரத்திலும் பெரியாண்டவர் கோயில் சுமார் 150 மீட்டர் தூரத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: