அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை: வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை

 

ஜெயங்கொண்டம், ஜூன் 2: அரியலூர் மாவட்டத்தில் உர மூட்டைகளை கூடுதல் விலைக்க விற்க கூடாது என வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தினர். அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி தலைமையில் மொத்த உர விற்பனையாளர்கள் மற்றும் உரம் வழங்கும் கம்பெனி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் சாந்தி, ஜென்சி, ராதிகா, பரமசிவம் மற்றும் வேளாண் அலுவலர் சதீஷ் மற்றும் சிந்துஜா, வேளாண்மை அலுவலர் தலக்கட்டுப்பாடு அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உரம் வழங்கும் கம்பெனிகள் மொத்த விற்பனையாளர்களுக்கு உரங்களை வழங்கும்போது அதன் விவரத்தை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் மொத்த விற்பனையாளர்கள் சில்லரை விற்பனையாளர்களுக்கு உரங்களை வழங்கும்போது, அதன் விவரங்களையும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தர வேண்டும். அது மட்டுமல்லாமல் சில்லறை விற்பனையாளர்கள் மானிய விலையில் உள்ள உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும்போது ரசீதில் முகவரியுடன் தொலைபேசி எண் கட்டாயம் இருக்க வேண்டும், விவசாயிகளுக்கு யூரியா உரங்களை அதிகமாக கொடுக்க கூடாது. யூரியா உரங்களை விற்பனை செய்யும் போது கண்டிப்பாக பில் முகவரியுடன் விவசாயியின் தொலைபேசி எண்ணுடன் விவசாயின் கையெப்பம் பெற்று கொடுக்க வேண்டும்.

உரம் விற்பனை நிலையத்தில் உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியலை அவசியம் பராமரிக்க வேண்டும். உரம் வைத்திருக்கும் கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். புதிதாக வரும் உரம் மூட்டைகளை தனியாக பராமரிக்க வேண்டும். பழைய உரம் மூட்டையை தனியாகவும் வைத்திருக்க வேண்டும், உரம் மூட்டையில் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது, என்று வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி, உரம் விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு நிலத்திற்கு ஏற்ப மட்டுமே உரங்கள் விநியோகிக்க வேண்டும். அதிகபட்சமாக உரங்கள் விநியோகிக்க கூடாது மற்றும் உரங்கள் விநியோகிக்கும் போது பில் கொடுக்கும் போது விவசாயிகளின் விவரங்களை இடம் பெற வேண்டும் என்று கூறினார். முடிவில் வேளாண்மை அலுவலர் தர கட்டுப்பாடு அருள்மாறன் நன்றி கூறினார்.

 

Related Stories: