சி.என்.ஜி. எரிவாயு விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தின எண்ணெய் நிறுவனங்கள்..!

சென்னை: கடந்த 11 நாட்களில் சி.என்.ஜி. எரிவாயு விலை 4-வது முறையாக உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் உள்ளிட்ட எரிவாயுக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

சென்னையில் 1 கிலோ சி.என்.ஜி. எரிவாயு விலை ரூ. 91.50-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2 உயர்ந்து ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டுமே 4 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது. தமிழகம் முழுவதும் டாக்ஸி, ஆட்டோ மற்றும் கார் பயனாளர்கள் சி.என்.ஜி. எரிவாயு பயன்படுத்தி வரும் நிலையில் இந்த விலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: