பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்

 

கரூர், மே 20: பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் வைத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஆசிரியர்கள் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வுகளை பதவி உயர்வு கலந்தாய்வுகளை நடத்தி வேண்டும். கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கலந்தாய்வுகள் நடைபெறுகின்ற போது, மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்பதால் கலந்தாய்வுகள் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், கல்வித்துறையில் வழங்க்ப்பட்டு வருகின்ற நிர்வாக மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், நேர்மையான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வுகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: