கோவை அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது நண்பர் மோகன் ராஜும் கைது செய்யப்பட்டார். கைதான கார்த்தி தப்ப முயன்றபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுமி கொலைக்கு நீதிகேட்டு உறவினர்கள், மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
