ஈரோடு, ஜூலை 29: யான் அறக்கட்டளை பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பெருந்தலையூர் கிராமத்தின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெருந்தலையூர் கிராம பகுதியின் தூய்மையை பராமரிக்கவும், கிராமத்தின் முக்கியமான 7 இடங்களில் யான் அறக்கட்டளை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இதன் திறப்பு விழா ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அருகில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கவுந்தப்பாடி எஸ்ஐ சண்முகம் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக கேமராக்களை திறந்து வைத்தார். இதில், யான் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
