போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2,655 வழக்குகள் பதிவு: ரூ.9.38 லட்சம் அபராதம் வசூல்

 

ஈரோடு,ஆக.3: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த ஜூலையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2,655 வழக்குகளை பதிவு செய்தனர். ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் ஈரோடு ப.செ.பார்க், ஜி.ஹெச். ரவுண்டானா, சூரம்பட்டி நால்ரோடு, காளை மாட்டுசிலை, கலெக்டர் அலுவலக பகுதியில் கடந்த ஜூலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில், மொபைல் போன் பேசியவாறு வாகனம் ஓட்டியது 84, குடிபோதை வாகன இயக்கம் 69, ஹெல்மட் அணியாமல் சென்றது 1,241, டிரைவிங் லைசன்ஸ் இன்றி வாகனம் இயக்கியது 183, சிக்னலில் நிற்காமல் சென்றது 15, பிற இனங்கள் என மொத்தம் 2,655 வழக்குகளை பதிவு செய்து வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அபராத தொகையாக ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது.

குடிபோதையில் வாகனம் இயக்கிய 41 பேரின் டிரைவிங் லைசன்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துறை செய்துள்ளனர்.

 

Related Stories: