×

இந்திய ஜனாநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, மே 20: ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை பலியாக்கும் வகையில் நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்க வலியுறுத்தியும் வாலிபர் சங்கம், இளைஞர் பெருமன்றம், மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சா.ஜனார்த்தனன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் எம்.விஜய், அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

Tags : Indian Democratic Youth Association ,Pudukkottai ,Youth Association ,Youth Forum ,Student Association ,Student… ,
× RELATED அரசு குடியிருப்பில் 10 கிலோ பதுக்கல்;...